search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில்  புதர்மண்டி கிடக்கும்  மைதானத்தை  சீரமைக்க வலியுறுத்தல்
    X

    புதர்மண்டி கிடக்கும் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம்.

    உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதர்மண்டி கிடக்கும் மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

    • கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக கல்வி இணை செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொருட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள மைதானங்கள், முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் ராஜேந்திரா ரோடு, அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படாமல் புதர் மண்டிக்காணப்படுகிறது. கூடைப்பந்து மைதான தரைதளம் சேதமடைந்துள்ளது. தவிர இரவு நேரத்தில், விஷமிகள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து மது அருந்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மாணவர்களுக்கு வசதிகள் செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், மைதானம் பராமரிப்பின்றி புதர்மண்டிக்கிடப்பதால் மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்களுக்கு, பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    Next Story
    ×