search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ஜி.வி.ஜி. கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
    X

    ஜி.வி.ஜி. கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி. 

    உடுமலை ஜி.வி.ஜி. கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

    • பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன் விழா தொடக்க உரையாற்றினார்.
    • உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் எட்ஜ் கம்பியூட்டிங் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் எட்ஜ் கம்பியூட்டிங் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கணிப்பொறியியல் செயற்கை நுண்ணறிவுத்துறையும், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவர் ஜெ.ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி முதன்மை உரையாற்றினார். பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன் விழா தொடக்க உரையாற்றினார்.

    இதையடுத்து உடுமலை அரசு கலைக்கல்லூரி கணிப்பொறி அறிவியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான ஈ.கார்த்திகேயன், கோவை கே.ஜி.கலை அறிவியல் கல்லூரி கணிப்பொறி பயன்பாட்டு துறை இணை பேராசிரியர் கே.எஸ்.மகராசன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ப்ரீத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள். நிறைவாக உதவி பேராசிரியர் கி.பவித்ரா நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரியில் இருந்து 153 மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×