என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொசுக்களை ஒழிக்க கூடுதலாக மருந்து அடிக்கும் எந்திரம்
- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.
- வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த மழைநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது.
இந்த கொசுக்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்தும் வகையில் 21 வார்டுகளிலும் கொசு மருந்துகள் அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காகவும், கொசு ஒழிப்புக்காகவும் மருந்து அடிக்கும் எந்திரம் போதிய அளவிற்கு இல்லாததால், கூடுதலாக 2 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான தீவிர நடவடிக்கை எடுத்த வெள்ளகோவில் நகராட்சி தலைவர் மு.கனியரசி, நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோரின் முயற்சியை கண்டு நகராட்சி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்