விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக ஜி.கே. சங்கர் நியமனம்

துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

அதன்படி திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர். தெற்கு மாவட்ட தலைவராக ஜி.கே சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மாவட்ட செயலாளராக ராம்குமார், துணைத்தலைவராக மகாதேவன், பொருளாளராக கிருஷ்ணன், இணைச்செயலாளராக கார்த்திக், தெற்கு மாவட்ட அமைப்பாளராக கவுதம், துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு மாவட்ட தலைவர் ஜிகே சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது 27 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com