search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில்  இன்று முதல்  308 தற்காலிக பட்டாசு கடைகள்   செயல்பட அனுமதி
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் 308 தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி

    • புறநகரில் பல்வேறு காரணங்களுக்காக 16 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 179 கடைகளுக்கு அனுமதி வழங்கி கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்துள்ளார்.
    • தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர். அதில் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 129 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் 195 பேர் என மாவட்டத்தில் 324 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.

    கடைகள் அமைய உள்ள பகுதி பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா மற்றும் கள ஆய்வு பணியை கடந்த ஒரு வாரமாக போலீசார் மேற்கொண்டு வந்தனர். அதன்பின் மாநகரில் 129 கடைகளுக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். புறநகரில் பல்வேறு காரணங்களுக்காக 16 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 179 கடைகளுக்கு அனுமதி வழங்கி கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்துள்ளார். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 308 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×