திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

நீதிமன்ற பணியாளர்களுக்கு பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.வழக்கறிஞர்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்ற காட்சி. 
பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்ற காட்சி. 
Published on

 திருப்பூர்:

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், திருப்பூர் முதன்ைம மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன்குழு மற்றும் நிறங்கள் அமைப்பு சார்பில் நீதிமன்ற பணியாளர்களுக்கு பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி வரவேற்றார். மாவட்ட விரைவு மகிளா நீதிபதி பாலு முன்னிலை வகித்து பேசுகையில், சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வழங்கப்படும் சமத்துவம் மூன்றாம் பாலினத்தவருக்கும் நாம் வழங்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை சக மனிதர்கள் போல் நடத்த வேண்டும் என்றார்.மாவட்ட குடும்பநல நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன்குழு தலைவருமான சுகந்தி மற்றும் கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறங்கள் அமைப்பின் இணை நிறுவனர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் டெல்பினா, நவீன்குமார் ஆகியோர் 3-ம் பாலினத்தவர்களில் உள்ள வேறுபாடுகள் குறித்தும், அவர்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்பட பல விவரங்கள் குறித்து விளக்கினர்.முடிவில் நீதித்துறை நடுவர் முருகேசன் நன்றி கூறினார். இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, வழக்கறிஞர்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com