என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது
- முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
- முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கான 3 ம் கட்ட கலந்தாய்வு நாளை 29-ந்தேதி நடைபெறுகிறது.இது குறித்து சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2022-23 ம் ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கான 3 ம் கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நாளை 29-ந்தேதி நடைபெறுகிறது.
இதில்,ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவுக்கான தரவரிசை 1,001 முதல் 2200 வரை உள்ளவா்கள் பங்கேற்கலாம். இக்கலந்தாய்வு குறித்த தகவல்கள் மாணவா்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவரிசைக் கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 பிரதி நகல்கள் எடுத்துவர வேண்டும்.மேலும் பாஸ்போா்ட் புகைப்படம் 6 மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்துடன், பெற்றோரையும் அழைத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்