search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை வழியாக கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    கோப்புபடம். 

    உடுமலை வழியாக கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

    • இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூருக்கு 9.31 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 9.52 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.13 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10.46 மணிக்கும், உடுமலைக்கு 11 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 11.09 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 11.14 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 11.22 மணிக்கும், பழனிக்கு 11.38 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 11.55 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.

    இதுபோல் திண்டுக்கல்லில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு அக்கரைப்பட்டிக்கு 2.11 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 2.27 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 2.36 மணிக்கும், பழனிக்கு 2.55 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 3.11 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 3.18 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 3.24 மணிக்கும், உடுமலைக்கு 3.33 மணிக்கும், கோமங்கலத்துக்கு 3.47 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 4.18 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4.43 மணிக்கும், போத்தனூருக்கு மாலை 5.08 மணிக்கும், கோவைக்கு 5.30 மணிக்கும் சென்று சேரும். இந்த ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×