search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் -  எச்.எம்.எஸ்., சங்கம் கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் - எச்.எம்.எஸ்., சங்கம் கோரிக்கை

    • பொது செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் ராஜாமணி, துணை தலைவர்கள்
    • திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள ரோடுகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் மற்றும் பொது தொழிலாளர் (எச்.எம்.எஸ்.,) சங்க நிர்வாக குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். பொது செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் ராஜாமணி, துணை தலைவர்கள் ஜெகநாதன், ரத்தினமூர்த்தி, துரைசாமி, முருகேசன், தனபால், செயலாளர்கள் துரைசாமி, கருப்புசாமி, முத்துகிருஷ்ணன், கிருஷ்ணதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கடந்தாண்டை விட நடப்பாண்டு 2 முதல் 5 சதவீதம் வரை போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். அக்டோபர் 1 -ந் தேதி சம்பளத்துடன் போனஸ் வழங்க வேண்டும். தொழில்களின் தற்கால பிரச்சினைக்காக சென்ற ஆண்டு முழுமையும் பணி செய்துள்ள தொழிலாளர்களுக்கு காரணம் சொல்லி காலதாமதப்படுத்திடக்கூடாது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள ரோடுகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×