search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம்  சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி.

    பல்லடம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதன்படி பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.

    இதே போல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை வழிபட்டனர்.

    Next Story
    ×