search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.22.51 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
    X

    கோப்புபடம். 

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22.51 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

    • திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
    • பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

    இதில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் தர நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ 8,340 வரை, இரண்டாம் தரம் ரூ.7,450 முதல் ரூ.8,000 வரை, மூன்றாம் தரம் ரூ.6,500 முதல் ரூ.7,450 வரை, பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

    தீபாவளியையொட்டி நவம்பா் 13 ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் நவம்பா் 14 ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நிலக்கடலை ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    Next Story
    ×