என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 163 வாகனங்கள் - 7-ந்தேதி ஏலம்
- உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
- ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி, நல்லூர் மற்றும் மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. அவ்வகையில், 3 போலீஸ் நிலையங்களை சேர்ந்த, 163 வாகனங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 7-ந் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர விருப்பமுள்ள நபர்கள் ஆதார் கார்டு, வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் மோட்டார் சைக்கிள் ஏலம் எடுக்க விரும்புவர்கள் வீரபாண்டி, நல்லூர், மங்கலம் போலீஸ் நிலையங்களை அணுகி, ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு தெற்கு தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்