search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் காயத்துடன் அரிய வகை ஆந்தை - வனத்துறையிடம் ஒப்படைப்பு
    X
    கா யத்துடன் பிடிபட்ட அரிய வகை ஆந்தையை படத்தில் காணலாம். 

    உடுமலையில் காயத்துடன் அரிய வகை ஆந்தை - வனத்துறையிடம் ஒப்படைப்பு

    • திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அய்யப்பன் கோவில் வீதியில் தனியார் நிறுவனம் உள்ளது.
    • காயம் அடைந்து காணப்பட்டதால் பறக்க முடியாமல் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அய்யப்பன் கோவில் வீதியில் தனியார் நிறுவனம் உள்ளது.சம்பவத்தன்று அதன் அருகில் உள்ள மரத்தில் இருந்து அரிய வகை பறவை ஒன்று தவறி கீழே விழுந்து கத்தியது. இதையடுத்து அங்கிருந்த நிறுவன ஊழியர்கள் அதை மீட்டனர்.

    அப்போது அது அரிய வகை ஆந்தை என்பதும் காயம் அடைந்து காணப்பட்டதால் பறக்க முடியாமல் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது. அந்த ஆந்தை எங்கிருந்து வந்தது?, அது எப்படி காயம் அடைந்தது? அல்லது யாராவது வேட்டையாட முற்பட்டனரா? என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் இதுகுறித்து உடுமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் அந்த அரிய வகை ஆந்தையை மீட்டுச் சென்றனர்.

    Next Story
    ×