search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
    X

    ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

    • கூட்டம் குறைவாக இருந்த கோவை - மன்னார்குடி, கோவை - ராமேஸ்வரம் ரெயில்களிலும் கூட்டம் நிறைந்து வருகிறது.
    • ஜூலை இரண்டாவது வாரம் வரை இதே நிலை தொடரும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வுகள் நடந்ததால், ரெயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கவில்லை. தற்போது கோடை விடுமுறை நிறைவு பெற உள்ள நிலையில் ரெயில்களில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. திருப்பூர் வழியாக செல்லும் பெரும்பாலான தொலைதூர ரெயில்களில் முன்பதிவு நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.

    இது குறித்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ரெயில்களில் அடுத்த 10 நாட்களுக்கு முன்பதிவில் இடமில்லை. கூட்டம் குறைவாக இருந்த கோவை - மன்னார்குடி, கோவை - ராமேஸ்வரம் ரெயில்களிலும் கூட்டம் நிறைந்து வருகிறது.

    பீஹார் ,பாட்னா, ஜார்க்கண்ட் தன்பாத், அசாம் திப்ரூகர் மற்றும் புதுடில்லியில் இருந்து தமிழகம் வரும் ரெயில்களின் முன்பதிவு பெட்டி படுக்கை, இருக்கை நிறைந்து, தொங்கியபடி ரெயில்களில் வடமாநிலத்தினர் பயணிக்கின்றனர். ஜூலை இரண்டாவது வாரம் வரை இதே நிலை தொடரும் என்றனர்.

    Next Story
    ×