search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம், அண்ணா நகர் பகுதியில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு   அபாயம்
    X

    தேங்கி நிற்கும் கழிவு நீரை படத்தில் காணலாம்.

    பல்லடம், அண்ணா நகர் பகுதியில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு அபாயம்

    • கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
    • கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில், சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் மேற்குப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் இதனால் கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    அண்ணாநகர் மேற்குப் பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் இங்குள்ள தாழ்வான பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும் மழை பெய்தால் இங்கு மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு அருகே கழிவுநீர் தேங்குவதால் ஆழ்குழாய் கிணற்று மூலம் வரும் நீரும் கழிவு நீராகவே வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கால்வாய் அமைத்து இந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×