search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம்  நகர  சாலையோரங்களில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
    X
    கோப்புபடம். 

    காங்கயம் நகர சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

    • திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.
    • காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட துணைத் தலைவா் மு.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக காங்கயம் பேருந்து நிலையம் அருகில், திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், பாதசாரிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

    எனவே, திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை ஆக்கிரமித்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×