search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டலபூஜை விழாவை முன்னிட்டு திருப்பூர் அய்யப்பன்  கோவிலில்  சிறப்பு கலைநிகழ்ச்சிகள்
    X

    கோப்புபடம். 

    மண்டலபூஜை விழாவை முன்னிட்டு திருப்பூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள்

    • திருப்பூரில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது.
    • ராஜபாளையம் உமாசங்கரின் இசையெனும் இறைமை சொற்பொழிவு நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில், 64ம் ஆண்டு மண்டலபூஜை விழா தொடங்கி உள்ளது. வருகிற 1-ந்ேததி கொடியேற்றம், கணபதி ேஹாமம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 6-ந்தேதி பவானி கூடுதுறையில் ஆராட்டு விழாவும், அன்று மாலை, திருப்பூரில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது.மண்டலாபிேஷக பூஜையை முன்னிட்டு தினமும் மாலை 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று கோவை உமாமகேஸ்வரியின் தாயுமான தலைவன் என்ற பக்தி சொற்பொழிவு. நாளை 26-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் ரவிக்குமாரின், எரிகிற கற்பூரம் ஆவேனோ பக்தி சொற்பொழிவு, 27-ந்தேதி, பட்டிமன்ற பேச்சாளர் ஐஸ்வர்யாவின் எண்ணிய முடிதல் வேண்டும் சொற்பொழிவு, 28-ந்தேதி உழவன் பக்தி இன்னிசை குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந்தேதி திருப்பூர் ஸ்ரீசத்திய சாய் சமிதியின் பஜனை பாடல்கள், 30-ந்தேதி நட்டுவனார் கார்த்திகை பிள்ளையின் இறைவன் செவிமடுத்த செந்தமிழ் வேதம் சொற்பொழிவு, டிசம்பர் 7-ந்தேதி சுண்டமேடு சபரி சாஸ்தா குழுவினரின் அய்யப்பன் பஜானமிர்தம், 10 -ந்தேதி ஸ்ரீகாவியா நிர்த்ராலயாவின் பரதநாட்டியம் நடக்கிறது. 11ந்தேதி கொங்கு தென்றல் மஞ்சுநாதன் சொற்பொழிவு, 12ந்தேதி சங்கரநாராயணனின் நால்வர் போற்றிய நன்னெறி பக்தி சொற்பொழிவு , 13 -ந்தேதி சங்கரநாராயணனின் ஆன்மிக வளர்ச்சிக்கு பெருந்துணை புரிவது பக்தியா? தொண்டா? பட்டிமன்றம் நடக்கிறது.

    14-ந்தேதி கோவை கவிதாவின் பக்தியோகமே வெற்றியோகம் சொற்பொழிவு, 15-ந்தேதி டி.கே.சி., கல்சுரல் நிகழ்ச்சி, 16ந்தேதி உடுக்கைபாட்டு அய்யப்பன் சரித்திரம் நிகழ்ச்சி நடக்கிறது.19-ந்தேதி வையத்துள் நல்வாழ்வு வாழ பெரிதும் தேவை, அருட்செல்வமா? பொருட்செல்வமா? என்ற பட்டிமன்றம், 21-ந்தேதி பேராசிரியர் தங்க ரவிசங்கரின் அன்பெனும் பிடியுள் சொற்பொழிவு, 22-ந்தேதி ராஜபாளையம் உமாசங்கரின் இசையெனும் இறைமை சொற்பொழிவு நடக்கிறது.

    24-ந்தேதி சிங்காரவேலு பட்டிமன்றம், 25-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் புவனேஷ்வரியின் இதயம் என்றும் உனக்காக சொற்பொழிவு, 26-ந்தேதி திமிரி சதாசிவத்தின், வேலை வணங்குவதே வேலை ஆன்மிக சொற்பொழிவு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×