search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை  நன்றாக படிக்க வைக்க வேண்டும் -  இயக்குனர் ஆர். கே. செல்வமணி அறிவுறுத்தல்
    X

    நிகழ்ச்சியில் ஆர்.கே. செல்வமணி பேசிய காட்சி.

    குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் - இயக்குனர் ஆர். கே. செல்வமணி அறிவுறுத்தல்

    • தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    திருப்பூர்:

    சுதந்திரப் போராட்டத் தியாகி கொடி காத்த குமரனின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாகி குமரன் அறக்கட்டளையின் சார்பாக, திருப்பூர் குமரனை நினைவு கூறும் வகையில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டு உரையாற்றுகையில், இங்கு வந்துள்ள தாய்மார்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளைப் போலவே, உங்கள் மருமகள்களையும் உங்கள் பிள்ளைகளாக நினைத்து வழி நடத்த வேண்டும். அது மட்டுமல்லாது, படிப்பு ஒன்றே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டு ஆண், பெண் என உங்களின் இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வையுங்கள். கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றார். மேலும், சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    Next Story
    ×