search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 லட்சத்திற்கு சூரியகாந்தி விதைகள் விற்பனை
    X

    கோப்புபடம். 

    ரூ.2 லட்சத்திற்கு சூரியகாந்தி விதைகள் விற்பனை

    • நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் பருப்பும் வியாழக்கிழமை அன்று சூரியகாந்தி விதைகளும் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 3 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதையை அதிகபட்சமாக ரூ.50.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.70-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×