search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தில்  கிராம சபை கூட்டம்
    X

    கோப்புபடம். 

    கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம்

    • ராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார்.
    • கிராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார்.

    தாராபுரம்:

    தாராபுரம் வட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு சம்பத் நகர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார் .ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாச்சிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கே. கே. ஜீவானந்தம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் மற்றும் நீதித்துறை கிராம அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை மகளிர் சுய உதவி குழுக்கள், அங்கன்வாடி உறுப்பினர்கள் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேளாண்துறை மற்றும் மருத்துவத்துறை, மின்சார வாரியம், கால்நடை மருத்துவர்கள் ஆகிய துறைகளில் இருந்து பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நவம்பர் 1ந் தேதியை தமிழகத்தின் உள்ளாட்சி தினமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஊராட்சி மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ,இணைய வழி வீட்டு வரி, சொத்துவரி, பண்ணை சார்ந்த தொழில்கள், மக்கள் நல ஆய்வு மற்றும் இதர பொருள்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை கவுண்டச்சிபுதூர் ஊராட்சி செயலர் பெரியசாமி செய்திருந்தார்.

    Next Story
    ×