search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கலூர் ஒன்றியத்தில்  சாலைகளை சீரமைக்க வேண்டும் -    ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    X

     கூட்டத்தில் சேர்மன் குமார் பேசிய போது எடுத்த படம்.

    பொங்கலூர் ஒன்றியத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும் - ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    • அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
    • முடிவில் ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரன் நன்றி கூறினார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ளபொங்கலூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் அபிராமி சோகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    ஜோதிபாசு (இந்திய கம்யூனிஸ்ட்):

    வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணாபுரம் வழியாக மசநல்லாம்பாளையம் வரை செல்லும் தார் சிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே இதனை சீரமைத்து தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து அரிஜன காலனிகளிலும் காங்கிரீட் சாலைகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்து சிரமம் ஏற்படுகிறது. எனவே இதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்.

    பாலகிருஷ்ணன்(தி.மு.க):

    அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து மழைநீர் செல்லும் பாலம் ஒன்றும் உள்ளது. இந்த நீர்வழிப் பாதையை தனியார் ஆக்கிரமித்து மண் கொட்டப்பட்டு வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தா விட்டால் மழைக்காலங்களில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்குவதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுப்பிரமணி (தி.மு.க):

    நல்லகாளிபாளையத்தில் இருந்து பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    வக்கீல் எஸ்.குமார் (ஒன்றிய குழு தலைவர்):

    ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசுவின் கோரிக்கையான வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணாபுரம் வழியாக மசநல்லாம் பாளையம் வரை செல்லும் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மண் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நீர் வழி பாதையும், மழைநீர் செல்ல பாலமும் உள்ளது. இதனை தடுத்து மண் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் ரூ.10 லட்சம் வரை பணிகள் செய்ய பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்து பட்டியல் தரப்பட்டவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலுசாமி, லோகுபிரசாந்த், ஸ்ரீ பிரியா, துளசிமணி, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×