search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    அவினாசி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது

    • இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்திரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
    • திருவாதிரை நாச்சியாருக்கு மாங்கல்ய நோன்பு ,அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்திரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 6-ந் தேதி ஆருத் ரா தரிசன விழா நடக்க உள்ளது. முன்னதாக வருகிற 28-ந்தேதி காலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மாலை இருவேளையும் திருவெம்பாவை மற்றும் பூஜைகள் நடைபெறும். திருவாதிரை நாச்சியாருக்கு மாங்கல்ய நோன்பு ,அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 6-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் சிவகாமி அம்மையார் உடனமர் நடராச பெருமானுக்கு 53 திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து மகாதீபாராதனைமற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    Next Story
    ×