

உடுமலை:
திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் சோழமாதேவி பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்ஜெயராமகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் சேதுராமன், மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.ஏ.சாகுல்அமீது மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள், சோழமாதேவி கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.