கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வீடுகளில் கழிவுநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் - பல்லடம் சுகாதார ஆய்வாளர் அறிவுறுத்தல்

நிறைய வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் ‘டயர்’களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது.
பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிப்பதை படத்தில் காணலாம்.
பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிப்பதை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம்:

கொசுக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முழுமையாக செயல்படுத்த முடியும். வீட்டில் குப்பைகள், பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். 

அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கூறினாலும், பொது மக்கள் கேட்பதில்லை. நிறைய வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் ‘டயர்’களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற சாக்கடைகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் சாக்கடையில் குப்பை போன்றவற்றை போட்டுவிடுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகி விடுகிறது. இதுபோன்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com