search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழந்த தூய்மைப்பணியாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி
    X

    நிதி உதவி வழங்கிய போது எடுத்த படம்.

    உயிரிழந்த தூய்மைப்பணியாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி

    • நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
    • காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் பழனி. இவர் கடந்த 4-ந் தேதி இயற்கை எய்தினார். இவரது மனைவியும் காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நகராட்சி 11-வது வார்டு பொதுமக்களின் உதவியோடு ரூ.35 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகர்மன்ற உறுப்பினர் கே.டி.அருண்குமார் பங்கேற்று, பழனியின் குடும்பத்தினருக்கு மேற்கண்ட தொகையை வழங்கினார். மேலும் நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

    Next Story
    ×