search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதை வசதிக்காக நஞ்சராயன்குளத்தில் வனத்துறையினர் கள ஆய்வு
    X

    கோப்புப்படம்.

    பாதை வசதிக்காக நஞ்சராயன்குளத்தில் வனத்துறையினர் கள ஆய்வு

    • திருப்பூர் ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளம், 310 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
    • ஆண்டு முழுக்க அரிய வகை பறவைகள் வந்து செல்லும் இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளம், 310 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஆண்டு முழுக்க அரிய வகை பறவைகள் வந்து செல்லும் இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.பொதுப்பணித்துறை வசமுள்ள இக்குளம், அதிகாரபூர்வமாக வனத்துறை வசம் ஒப்படைப்பதற்கான துறை ரீதியான பணிகள் நடந்து வருகின்றன.

    கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சேபனை பெறப்பட்டது. இக்குளத்தையொட்டி சர்க்கார் பெரிய பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை ஆகிய 3 கிராமங்கள், இக்குளத்தையொட்டி உள்ள குடியிருப்புவாசிகள், தங்களுக்கு குளக்கரை வழியாக பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடிதம் வழங்கினர். அந்த வகையில் 13 விண்ணப்பங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

    இந்த விண்ணப்பம் தொடர்பாக வனத்துறையினர் கள ஆய்வு செய்து, விதிப்படி அவர்களுக்கு வழித்தடம் வழங்கலாமா, வழித்தட வசதி ஏற்படுத்தி தருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு வழங்கியுள்ளனர். இதையடுத்து அடுத்தக்கட்ட பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×