search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியோர் இல்லங்களுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
    X

    தாராபுரம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்த காட்சி. 

    முதியோர் இல்லங்களுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு

    • மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
    • பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் செயல்படும் மத்திய அரசு மானியம் பெறும் ரியல் முதியோர் இல்லம் மற்றும் கட்டணமில்லாமல் செயல்படும் ஸ்ரீசாய் முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறையின் சார்பில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில், தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

    அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் 12 முதியோர் இல்லம் தனியார் முலம் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 320 நபர்கள் தங்கி பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தாராபுரம் வட்டத்தில் செயல்படும் மத்திய அரசு மானியம் பெறும் ரியல் முதியோர் இல்லம் மற்றும் கட்டணமில்லாமல் செயல்படும் ஸ்ரீசாய் முதியோர் இல்லமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது அனைத்து முதியோர் இல்லங்களும் விரைவில் உரிமம் பெற்று செயல்படவும் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவிக்காக இணைஇயக்குநர், சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் அவர்களுக்கு கடிதம் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

    ஆய்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×