search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடன் தருவதாக கூறி காங்கயம்  பெண்களிடம்  லட்சக்கணக்கில் பணமோசடி போலீசார் விசாரணை
    X

    கோப்புபடம். 

    கடன் தருவதாக கூறி காங்கயம் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி போலீசார் விசாரணை

    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது.
    • திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் வேலை பார்த்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் போல குழு கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழிற்கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்தது. அதன்படி இந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்தால் மட்டுமே கடன் உண்டு. தனிநபருக்கு பதிவு கட்டணமாக ரூ.1,341-ம், 10 பேர் கொண்ட குழு என்றால் ரூ.13 ஆயிரத்து 400-ம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை அந்த நிதி நிறுவனம் கூறியது.

    கடன் கிடைக்கும் என்ற ஆசையில் காங்கயம், வெள்ளகோவில், திருப்பூர் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்களும், குழுவினரும் பதிவுக்கட்டணம் செலுத்தினர். பதிவுக்கட்டணம் செலுத்தியவர்கள் கடன் கேட்டபோது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஒரு சில பெண்கள் ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம் கடன் கேட்டு அதற்கான முன்பணமாக ரூ.25 ஆயிரமும், ரூ.35 ஆயிரமும், சிலர் ரூ.70 ஆயிரமும் செலுத்தினர்.

    ஆனால் இந்த பணம் செலுத்திய பின்னரும் அந்த நிறுவனம் கடன் கொடுக்கவில்லை. இதையடுத்து பணம் செலுத்திய பெண்கள் அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது அந்த நிதி நிறுவனம் சார்பில் தனியார் வங்கி காசோலை கொடுக்கப்பட்டது. அந்த காசோலையை வங்கிக்கு சென்று மாற்ற முயன்றபோது அந்த வங்கி கணக்கில் பணம் இல்லை என்று ெதரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் காங்கயத்தில் உள்ள அந்த நிதி நிறுவனத்திற்கு திரண்டு வந்தனர். ஆனால் அந்த நிதி நிறுவன அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. ஊழியர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. நிதி நிறுவன பெயர் பலகையை கூட காணவில்லை. நேரம் செல்ல செல்ல அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காங்கயம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்த மோசடி குறித்து போலீசார் கூறுகையில்,

    இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தில் காங்கயம், அவினாசி, சோமனூர், பொன்னமராவதி, அன்னூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை என 7 இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது தர்மபுரியில் உள்ளது. இந்த நிதி நிறுவனம் கடன் வழங்குவதாக கூறி எத்தனை பேரிடம் மோசடி செய்தது என்று தெரியவில்லை. காங்கயம் அலுவலகத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்து இருக்கலாம். இதனால் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் இல்லாமல் பல லட்சம் கடன் கிடைக்கும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் பணம் கட்டி ஏமாந்து இருக்கலாம். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×