செல்போன் பறிப்பு - கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் தாரணியின் கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு வேகமாக சென்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் தாரணி ( வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

கடந்த 5-ந்தேதி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் தாரணியின் கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு வேகமாக சென்றனர்.

அப்போது அவ்வழியே எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 

இது குறித்த அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் பிடிபட்டவர்கள் நம்பியாம்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் மகன் சுரேஷ்(17) , சேவூரை சேர்ந்த சங்கர் மகன் பிரவின்குமார் (18) என்பதும் இவர்கள் இருவரும் சேவூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர் அவினாசியை அடுத்து குடும்பபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லோகநாதன் (18) என்பதும் தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டர் ர்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com