அவினாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் சம அளவில் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள்

குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியதற்கு தி.மு.க.வினர் மறுத்துவிட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவிநாசி:

அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. மற்ற 6 இடங்களில் அ.தி.மு.க, வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் தனலட்சுமியை அதிகாரபூர்வ வேட்பாளராக தி.மு.க, தலைமை அறிவித்து இருந்தது . 

இந்தநிலையில் இன்று நடைபெற்ற தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்து  தி.மு.க., போட்டி வேட்பளராக சசிகலா வேட்பு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க சார்பில் சித்ரா போட்டியிட்டார்.  

மும்முனை போட்டி நிலவிய நிலையில் நடைபெற்ற தேர்தலில் 3 பேரும் தலா 6 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியதற்கு தி.மு.க.வினர் மறுத்துவிட்டனர். இதனால் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com