search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் புதிய கழிவுநீர் கால்வாய்  அமைக்க பூமி பூஜை
    X

    கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    பல்லடத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை

    • பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து,
    • தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து, பின்னர் பச்சாபாளையம் குட்டையை அடையும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பட்டேல் வீதியில் வரும் கழிவு நீரை கருப்புராயன் கோவில் வீதி வழியாக செல்லாமல், பட்டேல் வீதி வழியாகவே செல்லும் வகையில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.4 லட்சம் மதிப்பில் இப்பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் கவிதா மணி தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர் மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, திமுக .,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், ஒப்பந்ததாரர்கள் வெள்ளியங்கிரி, கார்த்திகேயன், தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×