search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.அய்யம்பாளையத்தில் தனியார் பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X
    தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி. 

    வி.அய்யம்பாளையத்தில் தனியார் பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

    • திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது
    • தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது.சமீப காலமாக தனியார் பஸ் தங்கள் பகுதிக்கு வருவதில்லை எனக்கூறி நேற்று மாலை வி.அய்யம்பாளையம் பகுதிக்கு வந்த தனியார் பஸ்சை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மங்கலம் போலீசார் தனியார் பஸ்சை சிறை பிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியார் பஸ் நிர்வாகத்தினர் வி.அய்யம்பாளையம் பகுதிக்கு பஸ் இயக்கப்படும் என பொதுமக்களுக்கு எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்ததைத் தொடர்ந்து வி.அய்யம்பாளையம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×