search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் காந்திநகர்  ஏ.வி.பி., பள்ளியில்  மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசளிப்பு விழா
    X
    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்ற காட்சி. 

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

    • பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வி ஆண்டிற்கான மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது.

    பள்ளியில் செயல்பட்டு வரும் பல்வேறு மன்றங்களின் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளிலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே, டேக்வாண்டோ, சதுரங்கம்,கேரம்,நீச்சல், இறகுப்பந்து, கோ - கோ மற்றும் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளியின் பொருளாளர் லதா கார்த்திகேயன் மற்றும் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றி தழ்களையும், கேடயங்களையும் வழங்கினர்.

    முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். முடிவில் பள்ளியின் கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×