பெங்களூருக்கு கூடுதல் ரெயில் இயக்க வேண்டும் - திருப்பூர் பயணிகள் எதிர்பார்ப்பு

எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) தினமும் காலை 5:40 மணிக்கு இயக்கப்படுகிறது. மற்ற வகையில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ெரயில் இல்லை. தினசரி ெரயில்களாக உள்ள கன்னியாகுமரி - பெங்களூரு (எண்:16525), கண்ணூர்- யஷ்வந்த்பூர் (எண்:16528), கொச்சுவேலி - மைசூரு (எண்:16316), எர்ணாகுளம் - பெங்களூரு (எண்:12678) எக்ஸ்பிரஸ்களில் பயணிகள் கோவை, திருப்பூரில் இருந்து பயணிக்க வேண்டியுள்ளது.

மேற்கண்ட ெரயில்கள் கேரளாவில் இருந்து புறப்பட்டு, பல நிலையங்களை கடந்து வருவதால், கோவை, திருப்பூருக்கான இருக்கைகள் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. முன்பதிவு இருக்கை, படுக்கை வசதி மேற்கு மண்டல பயணிகளுக்கு கிடைப்பதில்லை. எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து ெரயில் பயணிகள் சிலர் கூறியதாவது:-

பெங்களூருவில் நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளதால், மேற்கு மண்டலத்தில் இருந்து அங்கு சென்று, பலரும் பணிபுரிகின்றனர். கோவை - பெங்களூரு இடையே பகல் அல்லது இரவில் நேரடி ெரயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.முன்பதிவு செய்வோருக்கும் இருக்கை உறுதியாகும்.

சேலம் கடந்து பெங்களூரு செல்லும் ெரயில்களில், கோவையில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஓசூர் பகுதிக்கு பயணிப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். எனவே அதிகரிக்கும் டிக்கெட் முன்பதிவை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னதாக பரீட்சார்த்த முறையில் கோவை - பெங்களூரு இடையே ெரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com