கலெக்டர் வினீத் தலைமையில் உறுதிமொழி ஏற்ற பணியாளர்கள்.
உள்ளூர் செய்திகள்
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கலெக்டர் வினீத் தலைமையில் அலுவலக பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலுவலகங்களில் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் தலைமையில் அலுவலக பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

