search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
    X
    கலெக்டர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி. 

    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

    • 276 பயனாளிகளுக்கு ரூ.15,50,000 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
    • துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 361 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் திருப்பூர் மாவட்ட முஸ்ஸிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை என 276 பயனாளிகளுக்கு ரூ.15,50,000 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர்கள் ஈஸ்வரி, விஜயகார்த்திக், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×