திருமூர்த்தி அணையில் மதகுகள் பராமரிப்பு பணி தொடக்கம்

அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளில் பிரதானமாக உடுமலை திருமூர்த்தி அணை உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.

பிரதான கால்வாய்க்கு நீர் திறக்கும் 3 மதகுகள், தளி கால்வாய், 1 மதகு, தற்போது முழுவதுமாக மேலே ஏற்றப்பட்டு ரப்பர் பீடிங், துருப்பிடித்திருந்த இணைப்புகள், போல்ட்கள் என அனைத்தும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் பழுது காரணமாக நீர்க்கசிவு அதிகளவு காணப்பட்டது. 3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரும்பு மதகுகளில் உள்ள பழுது நீக்கப்பட்டு நான்கு புறமும் ரப்பர் ஷீட் புதிதாக பொருத்தப்பட்டு பெயிண்ட் அடித்து மீண்டும் கீழே இறக்கப்படும். இதனால் முழுவதுமாக நீர்க்கசிவு தடுக்கப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com