search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவலர் பணி தேர்வுக்கு  இலவச பயிற்சி வகுப்பு -  உடுமலையில் 4-ந்தேதி தொடங்குகிறது
    X

    கோப்புபடம். 

    காவலர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - உடுமலையில் 4-ந்தேதி தொடங்குகிறது

    • பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • இத்தேர்வுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் 2-ம் நிலை காவலர்கள் பணிக்கு 2,600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இந்த தேர்வுக்கு www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 4-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, 0421 2999152 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×