search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: மாவட்ட எஸ்.பி. விசாரணை நடத்த கோர்ட்டு அதிரடி உத்தரவு
    X

    கோப்புபடம். 

    பல்லடத்தில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: மாவட்ட எஸ்.பி. விசாரணை நடத்த கோர்ட்டு அதிரடி உத்தரவு

    • இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனா, சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • விசாரணை அறிக்கை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட உள்ளது. போனஸ் வாங்கியதும் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர் புறப்படுகிறார்கள்.

    கடந்த திங்கட்கிழமை முதல் திருப்பூர் கடைவீதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று முதல் பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கி நடக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்கள் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் நேற்று காலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்கிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ரோந்துப்பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×