search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு புதிது புதிதாக வலசை வரும் பறவையினங்கள் -வனத்துறையினர் தகவல்
    X

    நஞ்சராயன் குளத்திற்கு புதிதாக வலசை வந்த பறவையினங்களை படத்தில் காணலாம்.

    திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு புதிது புதிதாக வலசை வரும் பறவையினங்கள் -வனத்துறையினர் தகவல்

    • 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
    • இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும்.

    திருப்பூர் :

    திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார நகர, கிராமப்புறங்களில், புதிது, புதிதாய் பறவையினங்கள் தென்படுகின்றன' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தமிழகத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. காடுகள், காடுகளை ஒட்டிய நகர, கிராமப்புறங்களில், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினர் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தொழில் நகரான திருப்பூரில், திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில், வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காப்பாளர்கள் சிவமணி, வெங்கேடஸ்வரன், திருப்பூர் இயற்கை கழகத்தினர், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மற்றும் நம் நாட்டை தாயகமாக கொண்ட பறவைகள் என, 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    அதே போன்று, ஊத்துக்குளி கைத்தமலை கிராமப்புறங்கள், அவிநாசி நகர்ப்புறம், கலெக்டர் அலுவலக வளாகம், கூலிப்பாளையம் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:-நஞ்சராயன் குளத்தில், பறவை வலசை வருவது, அதிகரித்து வருகிறது. இதுவரை காணக்கிடைக்காத பறவைகளை கூட, கணக்கெடுப்பில் பார்க்க முடிந்தது. ஆண்டுக்காண்டு பறவைகளின் வருகை, எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது, இயற்கை, இயல்பு மாறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி தான். எனவே, நீர்நிலைகளில் ரசாயன கலப்பு தவிர்ப்பது, மரம், செடி, கொடிகளை பாதுகாத்து வளர்ப்பது என, இயற்கையை பாதுகாக்கும் விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இது, இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.

    Next Story
    ×