search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தேசிய அளவிலான கேரம் போட்டி
    X

    கோப்புபடம்

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தேசிய அளவிலான கேரம் போட்டி

    • கேரம் போட்டி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாணவர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்களுக்கான ஒற்றையர் கேரம் போட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூர் லட்சுமிநகர் குலாலர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்குகிறார். போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். மேயர் தினேஷ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் பங்கேற்கிறார்கள். முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×