search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 நாட்கள்  வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் - பல்லடம் நகராட்சி ஆணையர் அறிவிப்பு
    X

    வீடு வீடாக தேசிய கொடி வழங்கப்பட்ட காட்சி. 

    3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் - பல்லடம் நகராட்சி ஆணையர் அறிவிப்பு

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பல்லடம் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற கருத்தியல் படி ஏற்றி கொண்டாடுமாறு அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணியில், நகராட்சி ஊழியர்கள், தற்காலிகபணியாளர்கள், மற்றும் கவுன்சிலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேசியக்கொடிகளை பெற்றுக் கொண்டு அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வீடுவீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    Next Story
    ×