search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளியில் பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கோப்புபடம்.

    ஊத்துக்குளியில் பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • தெருவிளக்கு பராமரிப்பு, வரி வசூல் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சி மூலமாகப் பணியாளா்களை நியமிக்கக்கூடாது.
    • அவுட்சோா்சிங் மூலமாக செய்ய வேண்டும் என்று அரசாணை 139 இல் உத்தரவிட்டுள்ளது.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஊத்துக்குளி ஆா்.எஸ்.பேருந்து நிலையம் முன்பு சிஐடியூ உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊத்துக்குளி பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா்.

    இதில் பங்கேற்ற ஊழியா்கள் கூறியதாவது:- தமிழக அரசு பேரூராட்சிப் பணிகளான பொது சுகாதாரம், குடிநீா் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, வரி வசூல் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சி மூலமாகப் பணியாளா்களை நியமிக்கக்கூடாது. அவுட்சோா்சிங் மூலமாக செய்ய வேண்டும் என்று அரசாணை 139 இல் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்த அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

    Next Story
    ×