search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு நிலம் வழங்க கோரி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தினர் மனு
    X

    மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்த காட்சி.

    அரசு நிலம் வழங்க கோரி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தினர் மனு

    • ஆட்டோர், கார், வேன், பஸ், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
    • மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினர் இன்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறோம். ஆட்டோர், கார், வேன், பஸ், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் மெக்கானிக், எலக்ட்ரீசியன், டிங்கர், பெயிண்டர், லேத் பட்டறை, பஞ்சர் ஒட்டுபவர் போன்ற பிரிவுகளில் 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

    தற்போது திருப்பூர் சீர்மிகு திட்டத்தின் கீழ் திருப்பூர் சீர்மிகு நகரமாக மாற உள்ளது. மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சாலையோரங்களில் உள்ள எங்கள் பணிமனைகளை தற்போது உள்ள சிறு குறு தொழில்பேட்டை, சிட்கோ, தாட்கோ போல் எங்களுக்கு என்று தனியாக அரசு நிலமோ அல்லது மானிய விலையில் தனியாக மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நகர் அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    Next Story
    ×