மாலைமலர் செய்தி எதிரொலி - பல்லடத்தில் கழிவு நீர் கால்வாய்க்கு மூடி அமைப்பு

அந்த வழியே நடந்து செல்வோர் தவறி கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது என மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்.
மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்.
Published on

பல்லடம்:

பல்லடம் பஸ் நிலையம் முன்பு உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய 2 இடங்களில் குழிகள் போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழிகளுக்கு மூடிகள் போடப்படவில்லை. இதனால் அந்த வழியே நடந்து செல்வோர் தவறி கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது என மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதனைப் பார்த்த அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தக் கழிவு நீர் கால்வாய் குழிகளுக்கு மூடி அமைக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து கழிவு நீர் கால்வாய் குழிகளுக்கு பணியாளர்கள் மூடி அமைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com