உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா

தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடியேற்றுவிழா நடைபெற்றக் காட்சி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடியேற்றுவிழா நடைபெற்றக் காட்சி.
Published on

உடுமலை,அக்.3-

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகே திறக்கப்பட்டது.கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி கட்சி முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு திறந்து வைத்தார். முன்னதாக காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜல்லிபட்டி முருகன், கிறிஸ்தவ சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட் பால், எல்எல்எப்., அரசு போக்குவரத்து கழகம் மாநில துணைச் செயலாளர் சிடிசி சத்தியமூர்த்தி, துப்புரவு பணியாளர்கள் மேம்பட்டு மைய மாநில துணை செயலாளர் விடுதலைமணி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் ஈஸ்வரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சயீத் இப்ராஹிம், உடுமலை ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல்,உடுமலை நகர செயலாளர் ரவிக்குமார் , குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டி பாபு ,மகளிர் விடுதலை இயக்கம் லட்சுமி,ராமாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com