search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க உதவியவர்களுக்கு பாராட்டு
    X

    நன்கொடை வழங்கிய வியாபாரிகளை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்றவர்கள்.

    பல்லடம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க உதவியவர்களுக்கு பாராட்டு

    • நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    • வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பல்லடம் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நிதி உதவுமாறு பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்திடம், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கண்காணிப்பு கேமராக்களுடன் அமைக்கப்பட்டது. அதனை கடந்த 20- ந்தேதி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களுக்கு நன்கொடை வழங்கிய வியாபாரிகளை கவுரவிக்கும் விழா பல்லடம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் ஆனந்தா செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் கானியப்பா பரமசிவம், துணைத் தலைவர் பானு பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் விமல் பழனிச்சாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமரா அமைக்க உதவிய நன்கொடைகையாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டது.

    Next Story
    ×