search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

      திருப்பூர் :

      இந்திய அஞ்சல் துறை சார்பாக பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

      இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல்கட்டமாக வினாடி-வினா எழுத்து தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 29-ந் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு dotirupur.tn@indipost.gov.in என்ற முகவரியிலும், 0421 2239785 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

      அடுத்தகட்டமாக வெற்றி பெற்றவர்கள் தபால் தலை தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் philately project சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அவர்களின் அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தொகை அவர்களின் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.

      இந்த தகவலை திருப்–பூர் அஞ்–சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

      Next Story
      ×