search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் -  தீ விபத்து தடுப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    அவினாசியில் - தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • அகல் விளக்குகளை பாதுகாப்பாக அணைப்பது வீடுகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    அவினாசி :

    திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டி அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி வளாகத்தில் அவினாசி தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவினாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னுசாமி கலந்து கொண்டு, வீடுகளில் பயன்பாடு இல்லாத நேரங்–களில் கியாஸ் சிலிண்டரை ஆப் செய்து வைப்பது, குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்குகளை பாதுகாப்பாக அணைப்பது உள்பட வீடுகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதே போல் பெரிய கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது, முதற்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், விபத்தில் இருந்து தப்பிப்பது மற்றும் மற்றவர்களை அங்கிருந்து மீட்பது தொடர்பான பயிற்சியையும் தீயணைப்புத்துறையினர் வழங்கினார்கள். தீ விபத்தின் போது தீயை அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது போன்றும் முன்னணி தீயணைப்பு வீரர்கள் பாபு, சீனிவாசன் உள்பட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×