search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை வெயில் தாக்கத்தால் மண்பானை விற்பனை அதிகரிப்பு
    X

    கோப்புபடம்.

    கோடை வெயில் தாக்கத்தால் மண்பானை விற்பனை அதிகரிப்பு

    • குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது.
    • ரூ. 250 முதல் ரூ.500 வரை விற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலுக்கு இயற்கையான, குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

    தண்ணீர் பானைகள், கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்திலான மண் பானை, குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம், கொள்ளளவு அடிப்படையில் ரூ. 250 முதல் ரூ.500 வரை விற்று வருகிறது.

    மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண் பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 100 பானைகள் விற்பனையாகிறது என்றனர்.

    Next Story
    ×